மய்யம் கொடிமரம் எனும் திட்டத்தை மரக்கன்றுகள் கொடுத்து துவக்கி வைத்தார் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில் நடைபெற்ற,
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில்,
கொடிகம்பங்களுக்கு மாற்றாக, மரக்கன்றுகளை நடுங்கள் என்று தலைவர் அவர்கள் கூறியதை செயல்படுத்தும் விதமாக,
விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், அணியின் மாநிலச் செயலாளர் திரு. @et_aravindraj அவர்களின் முன்னெடுப்பில்,
மய்யம் கொடிமரம் எனும் திட்டத்தை மரக்கன்றுகள் கொடுத்து துவக்கி வைத்தார் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மய்யம் கொடிமரம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1970810095102558230
Facebook: https://www.facebook.com/share/p/14NF9GB78Ks/
Instagram: https://www.instagram.com/p/DO-6b4JCejY/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==