ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில், திரு. கமல்ஹாசன்அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்போடு , ஜனவரி 23, 2023 அன்று , திரு . இளங்கோவன் அவர்களும் , காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளும் , மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் திரு . கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினர் .
இதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தத் தலைவர் திரு . கமல்ஹாசன் , ஜனவரி 25,2023 அன்று , தாம் காங்கிரசுக்கு ' நிபந்தனையற்ற ஆதரவு ' அளிப்பதாகத் தெரிவித்தார்.
பிரிவினைவாத சக்திகளைத் தமிழ்நாட்டிற்குள் எக்காரணம் கொண்டும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமே , இந்த இடைத் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கக் காரணம் என்று திரு . கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திரு. கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்
23 ஜனவரி, 2023
in நிகழ்வுகள்
சமீபத்திய காணொளி
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.