மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் (Data and AI) (அமெரிக்க உற்பத்தித் துறை) இயக்குநர் திரு. செசில் சுந்தர் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின் போது, செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புணர்வுடன் கையாளுதல், அதனால் ஏற்படும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, மற்றும் சமூக மேம்பாட்டு நற்பணிகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து இருவரும் விரிவாகக் கலந்தாலோசித்தனர்.
மேலும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் வெளிநாடுவாழ் தமிழர்களின் உலகளாவிய தாக்கம் மற்றும் அவர்களின் முக்கியப் பங்களிப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டை முன்னெடுப்பதில் இருவருக்கும் உள்ள தீவிரமான அக்கறையை வெளிப்படுத்துவதாக இந்தச் சந்திப்பு இருந்தது.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2010008032995131483
Facebook: https://www.facebook.com/share/p/18eZQda5ii/
Instagram: https://www.instagram.com/p/DTVb257ieg7/?igsh=MWtja2l5eWdvMmFhYg==