“வாச்சாத்தி” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

14 பிப்ரவரி, 2026

“வாச்சாத்தி” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,

இன்று (14.02.2026) சென்னையில் நடைபெற்ற “வாச்சாத்தி” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு, நீதியை நிலைநாட்டிட 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து போராடிய வாச்சாத்தி கிராம மக்களுக்கு சிறப்பு செய்தார்.

மேலும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய தலைவர் அவர்கள், வழக்கறிஞர் திரு. சம்கி ராஜ், வாச்சாத்தி ஆவணப்பட இயக்குநர் திரு. R.J.பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. சண்முகம் அவர்கள், முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. G.ராமகிருஷ்ணன் அவர்கள் ஆகியோருடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சினேகன், திரு. முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Vachathi

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2022721952360841660?s=20

Facebook: https://www.facebook.com/share/p/181cCNCxfm/

Instagram: https://www.instagram.com/p/DUvx65Ugf2T/?igsh=MTk3bXUxOW9zYmdxdg==

சமீபத்திய காணொளி







Share this post