அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க சட்டத்தைக் கொண்டுவந்த, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

25 டிசம்பர், 2025
 
S

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,

நேற்று திருச்சி மண்டலத்திற்குட்பட்ட, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேப்பூர், வேப்பந்தட்டை, கண்டியூர், சீர்காழி, திருவோணம், திருமயம் ஆகிய ஊர்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

திருச்சி மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார் , மாவட்டச் செயலாளர்கள் திரு. அனஸ், திரு. மனோகர், திரு. முத்துகுமார், திரு. கண்ணன் திரு. ரெங்கசாமி, திரு. மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் திரு. ஜெய் பார்த்தீபன், திரு. சாதிக் பாட்ஷா, திரு. சண்முகம்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. கார்த்திக்ராஜ், நகரச் செயலாளர் திரு. கமலி கனேசன் அவர்கள், ஒன்றியச் செயலாளர் திரு. R. திருமேனி ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்...

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2004180765144236299

Facebook: https://www.facebook.com/share/p/1D1D2JeBfm/

Instagram: https://www.instagram.com/p/DSsBv2qCT6N/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post