மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் மற்றும் நிகழ்வுகள்.

23 January 2024

தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இன்று (23.01.2024 ) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்துவது, ஏழாம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுவது, தேர்தல் வியூகங்களை உருவாக்க தகுதிசால் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பது, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மேம்பாட்டிற்காக மாற்றுத் திறனாளிகள் அணியை உருவாக்குவது, காலநிலை மாற்றத்தின் கோரவிளைவுகளை மனதிற்கொண்டு மக்கள் நீதி மய்யம் பேரிடர் மீட்புக் குழுவை உருவாக்குவது, தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள், விவசாய சங்கத்தினர், மற்றும் மகளிர் உள்ளிட்ட 200 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்கள்.

மேலும் மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட செயலாளர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பிறகு மாணவர்களை சந்தித்த தலைவர் நம்மவர், அரசியலின் மாற்றம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1749795319284658615?t=HvRKodbtsfT4RShAz8KEHg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/MjXFzE6wLZmfW9cm/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C2cgnrXJY8C/?igsh=MWo5MWp4MHQ1cjc4MA==


Recent video







Share this post