மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கால்பந்துப் போட்டி சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. எழும்பூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. சீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை, கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா. I.P.S (Retd), சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கோப்பை மற்றும் பதக்கம் வழங்கிப் பாராட்டினார். பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. அரவிந்ராஜ் அவர்கள் ஊக்கப் பரிசுகளை வழங்கினார்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கட்சியின் எழும்பூர் மநீம மாவட்டப் பொருளாளர் திரு. ஜாபர் அலி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. வெங்கடேஷ்வரி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், நகரச் செயலாளர்கள் திரு. கமல், திரு. ராமச்சந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. சிங்காரவேலன், திரு. லாரன்ஸ், கிளைச் செயலாளர் திரு. பாஸ்கர், நகர அமைப்பாளர் திரு. தினேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சமூக ஊடக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. சஞ்சய், திருமதி. நிவேதா, மாவட்ட துணைச் செயலாளர் திரு. மோசஸ், வட்டச் செயலாளர்கள் திரு. வின்சென்ட், திருமதி. சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர்கள் திருமதி. சிந்தனை செல்வி, திருமதி. சுகன்யா, திரு. விஜய், திருமதி. சுதா, திருமதி. லட்சுமி, திரு. அரவிந்தன், திரு. அப்பு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1918146634111963509
Facebook: https://www.facebook.com/share/p/16G8WiBBu4/
Instagram: https://www.instagram.com/p/DJIt9eopLup/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==