மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரி மற்றும் மரக்கன்றுகள் விநியோகம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அம்பத்தூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. தனபாலன் அவர்களின் தலைமையில், வட்ட செயலாளர் திரு. உமாசங்கர் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை மாநகராட்சி 93-வது வார்டில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் மற்றும் மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர், பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு, வெள்ளரி, தர்பூசணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.
பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைதீஸ்வரன், பொறியாளர் அணி மண்டல செயலாளர் திரு. சரவண குமார், மாவட்ட செயலாளர்கள் திரு. மாறன், திரு. கோமகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தர்பூசணி விநியோகம் செய்து, உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டனர். இதில் 14 நபர்கள் புதிய உறுப்பினர்களாக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நிகழ்வில் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சாந்தி பாய், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. ரவி, நற்பணி அணி நகர அமைப்பாளர் திரு. கமல் குமார், வட்ட செயலாளர்கள் திரு. V. நவசேகர், திரு. ராஜேஷ், திரு. சரவணன். கிளை செயலாளர்கள் திரு. முருகன், திரு, D.மனோகரன், திரு. P. ஏகாம்பரம், திரு. சிவகுமார், திரு.விஜயகுமார், திருமதி. திலகம், திருமதி. மீனாட்சி, திருமதி. தீபா லக்ஷ்மி, திரு. கோகுல கிருஷ்ணன், திரு. யஷ்வந்த், திரு. பிரவீன், திரு. இளையராஜா, திரு. சுரேஷ், திரு, ஜெய்கிருஷ்ணன் , திரு. ரவி, திருமதி. சங்கரி, திருமதி. அக்தரி பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1924439316069269616
Facebook: https://www.facebook.com/share/p/14EHi4pDpK8/
Instagram: https://www.instagram.com/p/DJ1biH7JSn7/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==