வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் மக்களுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் மாணவர் அணியினர்..

21 November 2024

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் மக்களுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் மாணவர் அணியினர்..

சென்னை மாநகராட்சியின் 47-வது வார்டு ஹரி நாராயணபுரம் நடுநிலைப் பள்ளி, 147-வது வார்டு ஆலப்பாக்கம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தூத்துக்குடி 9-வது வார்டு ஒட்டப்பிடாரம் மாப்பிள்ளையூரணி அரசு தொடக்கப் பள்ளி, விழுப்புரம் 2-வது வார்டு கடலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 16-வது வார்டு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் அவர்கள் ஒருங்கிணைப்பில், 

மாணவர் அணியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு. தேவேந்திரன், இராயபுரம் மநீம மாவட்ட அமைப்பாளர் செல்வி. ஜெயந்தி, செஞ்சி மாவட்ட அமைப்பாளர் செல்வி. கீதா, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் திரு. கார்த்திக், ஓட்டப்பிடாரம் மாவட்ட அமைப்பாளர் திரு. அருண் ஜேம்ஸ், நிர்வாகிகள் திரு. பார்த்திபன், திரு. வெற்றிவேல், திரு. சந்துரு உள்ளிட்டோர் இந்த முகாம்களில் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உதவினர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1859466147797848139

Facebook: https://www.facebook.com/share/p/1Eu4Td8LX6/

instagram: https://www.instagram.com/p/DCnxKvHJ1TP/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post